
சென்னை போரூரிலிருந்து அண்ணா சாலைக்குப் பேருந்தில் வந்து செல்லும் நண்பர் ஒருவர் திடீரென போன் செய்து, 'திருவல்லிக்கேணியில நீங்க இருக்கிற மேன்ஷன்ல எனக்கும் ஒரு ரூம் கிடைக்குமா?’ என்று கேட்டார். சமீபத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம்தான் நண்பர் திருவல்லிக்கேணியில் ரூம் தேடி பார்க்கச் சொன்னதற்கான காரணம்.
நண்பர் தனியாள் என்பதால் நினைத்த நேரத்தில் வசிக்கும் இடத்தை மாற்றிவிடுவார். ஆனால், குழந்தை குட்டிகளோடு இருக்கும் குடும்பஸ்தர்கள் நினைத்த மாத்திரத்தில் வீட்டை மாற்றிவிட முடியுமா?
வீட்டுப் பிரச்னை இப்படி என்றால், பால் விலை உயர்வு வேறு மாதிரி. நேற்று வரை ஐந்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த டீ இப்போது ஏழு ரூபாய். காபியோ எட்டு ரூபாய் ஆக்கிவிட்டார்கள். சாதாரண டீக்கடையிலேயே இப்படி என்றால், இனி ஒரு நல்ல ஓட்டலுக்கு போய் ஒரு காபி குடிப்பது என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாக இருக்காது. பால் விலை உயர்ந்ததால், தயிர், மோர், இனிப்பு வகையறாக்கள் என பலவற்றின் விலையும் உயர்ந்து சாதாரண மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது.
இந்த இரண்டு இடியும் போதாது என்று, கூடிய விரைவில் மின் கட்டணத்தையும் உயர்த்த தமிழக அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறதாம். ஏற்கெனவே பெட்ரோல் விலை, காய்கறி விலைகள் எகிறிக் கிடக்க, இப்போது பால், பஸ் கட்டண உயர்வுகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு. எப்படி எல்லாம் இந்த திடீர் செலவுகளைச் சமாளிக்கலாம் என, நிதி ஆலோசகர் சுபாஷினியிடம் கேட்டோம். விலாவாரியாக எடுத்துச் சொன்னார் அவர். இதோ அந்த யோசனைகள்:
''இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்கள் நமக்கு கற்று தந்த பாடம். ஆனால், அதிகரித்துவரும் விலைவாசியை எப்படி சமாளிப்பது என்பதை நாம்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. செலவுகளைத் திட்டமிடும் முன் நாம் தெளிவாக இருக்க வேண்டிய விஷயம், எந்த சூழ்நிலையிலும் நமது சேமிப்பு பழக்கத்தைக் கைவிடக்கூடாது என்பதுதான்.

செலவுகள் அதிகரித்து வருகிறது என்பதற்காக நமது தேவைகளை குறைத்துக் கொள்வது என்பது சிறந்த வாழ்கை முறையல்ல. அதை சமாளிப்பதற்கான தெளிவான திட்டமிடலும், அதை அமல்படுத்துவதிலும்தான் நமது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். இதற்கு என்ன செய்யலாம்?


''இதெல்லாம் என் ஆலோசனை மட்டுமல்ல, அனுபவமும்கூட'' என முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார் நிதி ஆலோசகர் சுபாஷினி. அவர் சொன்ன விஷயங்களில் பாதியை ஃபாலோ செய்தாலே போதும், திடீர் செலவை ஈஸியா சமாளிக்கலாம் போலிருக்கே!
No comments:
Post a Comment