
எத்தனை வழிகளில் நீங்கள் ஏமாறுகிறீர்கள்!
பெட்ரோல் பங்க்குகளைப் பொறுத்தவரை அவர்களால் நம்மை மூன்று விதங்களில் ஏமாற்ற முடியும்!
.gif)
''பெட்ரோல் போடறதுக்கு முன்னாடி, 'ஜீரோ செக் பண்ணிக்கோங்க’னு நம்மகிட்ட சொன்னதும் சொல்லி வச்சமாதிரி யாராவது வந்து, நம்மோட கவனத்தை திசை திருப்பிடறாங்க. 'பில் வேணுமா, சில்லறை இருக்குதா’ இப்படி ஏதாவது கேட்கவும் நாமும் அதற்கு பதில் சொல்வோம். ஆனா அந்த கேப்புல நமக்கு குறைவான பெட்ரோலை போட்டு கதையை முடிச்சிருப்பாங்க! எதேச்சையா எனக்கு சந்தேகம் வந்து தொடர்ச்சியா கவனிச்சப்போதான் தெரிய வந்துச்சு அந்த குறிப்பிட்ட பங்க்ல நம்மை ஏமாத்தறாங்கனு. எல்லா இடத்திலேயும் இப்படித்தான்னு நான் சொல்லலை. ஆனா நாமளும் உஷாரா இருந்துக்கிடறது நல்லதுதானே!'' என்றார் அந்த வாசகர்.
''எப்போதுமே நான் ஒரே பெட்ரோல் பங்கில்தான் பெட்ரோல் போடுவேன். அதுவும் ஆயிரம் ரூபாய்க்குத்தான் போடுவேன். ஒருமுறை ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னேன். ஆனால் அவர்களோ 800 ரூபாய் அளவுக்கு மட்டுமே போட்டுவிட்டு என்னிடம் 1000 ரூபாய்க்கு போட்டுவிட்டதாகக் கூறிவிட்டார்கள். அவசரத்தில் மீட்டரை நான் பார்க்காதது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது போலும். ஆனாலும் அந்த பங்கில் எதோ தவறு நடக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.

பெட்ரோல் பங்க்குளைப் பொறுத்தவரை அவர்களால் நம்மை மூன்றே மூன்று விதங்களில்தான் ஏமாற்ற முடியும் என்கிறார்கள். ஒன்று கலப்படம் செய்வது மூலமாக. இரண்டாவது நம் கவனத்தை திசை திருப்புவது மூலமாக குறைவாகப் போடுவது. மூன்றாவது மிஷினிலேயே அளவை மாற்றிவிடுவது.
1 கலப்படம்: எப்படி நடக்கிறது..?

பாதிப்பு
இத்தகைய கலப்பட பெட்ரோல் போட்டு வாகனத்தை ஓட்டும்போது குறைவான மைலேஜே கிடைக்கும். மைலேஜ் குறைவு என்பதை விட வாகனத்தை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை, என்ஜின் கெட்டுப்போதல் என பல வகைகளில் நம் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். மேலும் சுற்றுச் சூழலும் மாசுபடும்.
எப்படிக் கண்டுபிடித்து தவிர்ப்பது?
பெட்ரோல் தரத்தை வாடிக்கைய£ளர்கள் யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்க முடியும். இதற்கான உபகரணங்கள் அனைத்தும் பெட்ரோல் பங்க்கிலேயே இருக்கும். காரணம் தினமும் பெட்ரோலின் அடர்த்தியை பங்க் உரிமையாளர்கள் சரி பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வண்டியில் இருந்து பெட்ரோலை இறக்கும் போதே ஹைட்ரோமீட்டர் உதவியுடன் பெட்ரோலின் அடர்த்தியை குறித்து வைத்துக்கொள்வார்கள். நாம் சோதனை செய்யும்போது இரண்டு அடர்த்திக்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்தால், சந்தேகமே தேவையில்லை அது கலப்பட பெட்ரோல்தான்.
அடுத்தது, வடிதாள் (filter paper) மீது சில சொட்டுகள் பெட்ரோல் விட்டால் தூய்மையான பெட்ரோலாக இருந்தால் எளிதில் ஆவியாகிவிடும். கலப்பட பெட்ரோல் என்றால் சில நிமிடங்கள் ஆகும்.

பெட்ரோல் பங்கில் இருக்கும் மெஷின்கள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து சீல் வைக்கும் பொறுப்பு மத்திய அரசின் கீழ் இயங்கும் எடை மற்றும் அளவு (வெயிட் அண்ட் மெஷர்மென்ட்ஸ்) துறையைச் சேர்ந்தது. இவர்கள் சீல் வைத்த பிறகு அந்த எடையையோ, அளவையோ மாற்றக் கூடாது. ஆனால் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் அதை மாற்றிவிடுகிறார்கள். இதனால் வெளியில் இருந்து பார்க்கும் போது நமக்கு மெஷின் சரியான அளவு காண்பிப்பது போல தெரிந்தாலும், நமக்கு கிடைப்பதென்னவோ குறைந்த அளவு பெட்ரோல்தான்.
3 கவனத்தை திசை திருப்புதல்.
ஜீரோ பார்க்கவிடாமல் 'கார்டா, கேஷா’ என்று கேட்பதில் ஆரம்பித்து பல வழிகளில் நம் கவனத்தை திசை திருப்பிவிடுகிறார்கள். அதேபோல் முக்கால்வாசி போட்டதும் நம் கவனத்தை திசை திருப்பிவிட்டு, 'போட்டாச்சு, வண்டியை முன்னே எடுங்க’ என்பார்கள். நாம் சொன்ன அளவைத்தான் போட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அதற்கு முன்பா கவே மீண்டும் ஜீரோ ஆக்கி வைத்து விடுவார்கள்!

பெட்ரோல் குழாய் எப்போதும் மேல்நோக்கியே இருக்கும். காரணம் அந்த குழாயில் சிறிதளவு பெட்ரோல் இருக்கும். மதிய நேரங்களில் வாடிக்கை யாளர்கள் யாரும் வராத சமயத்தில் குழாயை கீழ் நோக்கி வைத்தால் 100 மில்லி வரை பெட்ரோல் அல்லது டீசல் கிடைக்கும். அந்த சமயத்தில் வரும் வாடிக்கையாளருக்கு 100 மில்லி வரை குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது.
திட்டம் போட்டு நம் பர்ஸை சுரண்டுபவர்கள் எத்தனையோ அவதாரங்கள் எடுத்து வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் நாம் மட்டும் விழிப்பாக இருந்துவிட்டால் போதும் அவர்களது பாச்சா எடுபடாமல் போய்விடும். அதனால் எப்போதுமே விழிப்பாக இருங்கள். அது நீங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணமல்லவா!
- வா.கார்த்திகேயன்
படம்: ச.இரா.ஸ்ரீதர்
படம்: ச.இரா.ஸ்ரீதர்
பெட்ரோல் போடும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
''அளக்கச் சொல்லுங்கள்!''
இத்தகைய புகார்கள் குறித்து ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் பேசியபோது, ''நீங்கள் சொல்வது போல நடப்பதில்லை. அப்படி முறைகேடு நடப்பதாக மக்கள் நினைத்தால் அங்கிருக்கும் புகார் பதிவேட்டில் பதிவு செய்யலாம். அந்த பெட்ரோல் பங்கின் மேலாளர் அல்லது சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் மேலாளரிடம் புகார் செய்யலாம். ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அந்த பெட்ரோல் பங்கிலேயே அளவு மற்றும் தரத்தை சோதிக்குமாறு கேட்கலாம். இதை சோதித்துக் காண்பிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கின் கடமை!'' என்றார்கள்.
|
கோர்ட்டுக்குப் போகலாம்!
![]() |
No comments:
Post a Comment